செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் 2,500 ஆட்டோக்களுக்கு இலவச பெட்ரோல்
பண்ருட்டியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவகொழுந்து கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பண்ருட்டி:
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக ஆட்டோக்கள் இயக்கப்பட வில்லை.தற்போது ஒரே ஒரு பயணி மட்டும் ஏற்றி செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 2,500 ஆட்டோ டிரைவர்களின் நலன் கருதி ஆட்டோக்களுக்கு பெட்ரோல் போடும் பணி தே.மு.தி.க.சார்பில் நடந்தது.
பண்ருட்டியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவகொழுந்து கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட, நகர தே.மு.தி.க. நிர்வாகி திரளாக கலந்து கொண்டனர்.