செய்திகள்
வெளிநாட்டில் உள்ள கணவர் பேசாததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வெளிநாட்டில் உள்ள கணவர், தன்னிடம் பேசாததால் மனம் உடைந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நிர்த்தனமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் சுகந்தி(வயது 24). இவருக்கும், தஞ்சை கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் ராஜா(33) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.
திருமணம் முடித்த இரண்டு மாதத்திற்கு பிறகு ராஜா, வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு சுகந்தி, ராஜாவின் வளர்ப்பு தந்தையான பாஸ்கரன் என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் சுகந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரது பெற்றோர் வீட்டுக்கு, ராஜாவின் வளர்ப்பு தந்தை அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக ராஜா, சுகந்தியிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் சுகந்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவர் தன்னிடம் பேசாததால் மனம் உடைந்த சுகந்தி நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சுகந்திக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுபற்றி நாகை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நிர்த்தனமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் சுகந்தி(வயது 24). இவருக்கும், தஞ்சை கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் ராஜா(33) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.
திருமணம் முடித்த இரண்டு மாதத்திற்கு பிறகு ராஜா, வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு சுகந்தி, ராஜாவின் வளர்ப்பு தந்தையான பாஸ்கரன் என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் சுகந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரது பெற்றோர் வீட்டுக்கு, ராஜாவின் வளர்ப்பு தந்தை அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக ராஜா, சுகந்தியிடம் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் சுகந்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவர் தன்னிடம் பேசாததால் மனம் உடைந்த சுகந்தி நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சுகந்திக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுபற்றி நாகை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.