செய்திகள்
கணபதி

டேங்க் ஆபரேட்டர் அடித்து கொலை: கைதான மேஸ்திரி வாக்குமூலம்

Published On 2020-02-20 10:45 GMT   |   Update On 2020-02-20 10:45 GMT
ஜோலார்பேட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலி ஆசைப்பட்டதால் கொலை செய்தேன் என்று கைதான மேஸ்திரி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ரமேஷ் (43). டேங்க் ஆபரேட்டர். இவரது மனைவி நதியா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் கடந்த 4-ந்தேதி தாமலேரிமுத்தூர் பாட்டாளி நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மனைவி நதியா, அவரது தம்பி அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கணபதி என்பவரை தேடி வந்தனர்.

ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கணபதியை கைது செய்தனர்.

ரமேஷ் மனைவி நதியா சித்தாளாக என்னிடம் வேலை செய்து வந்தார்.எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றிவந்தார். இதனால் ரமேசுக்கும், நதியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நதியாவின் சகோதரர் அரவிந்தன் மனைவியிடம் ரமேஷ் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அரவிந்தனுக்கும், ரமேசுக்கும் விரோதம் ஏற்பட்டது. ரமேசின் நடவடிக்கை மோசமாக இருந்து வந்தது.

இதனால் அரவிந்தனும் நதியாவும் சேர்ந்து ரமேசை கொலை செய்ய திட்டமிட்டனர். என்னிடம் இது சம்பந்தமாக கூறினர். நதியா ஆசைப்பட்டதால் கொலைக்கு நான் சம்மதித்தேன்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரமேசை அரவிந்தன் செல்போன் மூலம் குடிக்க அழைத்தான். இதை நம்பி வந்த ரமேசை, பாட்டாளி நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்று குடிக்க வைத்து ரமேசை கத்தியால் வெட்டி கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கணபதியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News