செய்திகள்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை திருச்சி வருகை

Published On 2019-07-18 15:01 GMT   |   Update On 2019-07-18 15:01 GMT
அரியலூரில் நாளை புத்தக திருவிழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.
அரியலூர்:

அரியலூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழக பண்பாட்டு  பேரமைப்பு, மாவட்ட நிர்வாகம் சார்பில் 5-வது புத்தக திருவிழா நாளை (19-ந்தேதி) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நடைபெறுகின்றது. நாளை நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனிபால கிருஷ்ணன் தலைமை தாங்கு கிறார். செயலாளர் ராமசாமி வரவேற்று பேசுகிறார். மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் பொன்னாடை போர்த்துகிறார். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சீனிவாசன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்கிறார். 

தமிழக அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், ஆர்.டி.ராமச்சந்திரன், புத்தகத் திருவிழா ஒருங்கி ணைப்பாளர் பொருளாளர் நல்லப்பன், ரகுநாதன், துணைத்தலைவர் இளங்கோ, துணை செயலாளர் ஜோதி ராமலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் செல்லப்பாண்டி யன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 

விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து புத்தக திருவிழாவை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமி ழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வருகிறார். 

திருச்சியிலிருந்து கார் மூலமாக பெரம்பலூர் விருந்தினர் மாளிகை சென்று பின்னர் ராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கார் மூலமாக அரியலூர் சென்று புத்தக திருவிழாவை  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். பின்னர் கல்லங்குறிச்சி கலியுகவரதராஜ பெருமாள் கோவில் சென்று சாமி தரிசனம் செய்கிறார். 
பின்னர் அரியலூர் விருந்தினர் மாளிகை சென்று விட்டு கார் மூலமாக திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு எஸ்.பி. சீனிவாசன்  உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. இளஞ்செழியன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News