செய்திகள்
அரியலூர் அருகே சாக்குப்பையில் கட்டி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மரணம்
அரியலூர் அருகே சாக்குப்பையில் கட்டி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள நாகம்பந்தல் கிராமத்தில் வீரனார் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில், பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். உடனே குழந்தையை மீட்டு ஆண்டிமடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது.
பிறந்து சில மணி நேரமே ஆன அந்த குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. தகாத உறவில் பிறந்ததால் அந்த குழந்தையை தாய் சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள நாகம்பந்தல் கிராமத்தில் வீரனார் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில், பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். உடனே குழந்தையை மீட்டு ஆண்டிமடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது.
பிறந்து சில மணி நேரமே ஆன அந்த குழந்தையின் தாய் யார் என்று தெரியவில்லை. தகாத உறவில் பிறந்ததால் அந்த குழந்தையை தாய் சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.