செய்திகள்

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 8 ஆடுகள் பலி

Published On 2019-06-16 14:13 GMT   |   Update On 2019-06-16 14:13 GMT
திருப்பத்தூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 ஆடுகள் மின்சாரம் தாக்கி பலியானாது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட இளவம்பட்டி அம்மன்புரம் வட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி. நடராஜ் (வயது 70). இவரது மனைவி கவரம்மாள் (56). இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது பலத்த காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

அப்போது விவசாய நிலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை தெரியாமல் ஆடு ஒன்றின் பின் ஒன்றாக சென்றன. 8 ஆடுகளும் மின்சாரம் தாக்கி பலியானது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் மற்றும் மின்சாரத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News