செய்திகள்

சோளிங்கர் அருகே உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது

Published On 2019-06-16 14:03 GMT   |   Update On 2019-06-16 14:03 GMT
சோளிங்கர் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சோளிங்கர்:

சோளிங்கர் வெங்கபட்டு காலனி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை உல்லாசம் அனுபவித்தார்.

கடந்த 8-ந் தேதி இரவு நவீன்குமார் இளம்பெண்ணை போன் செய்து அழைத்தார். பின்னர் அவரை உல்லாசத்திற்கு அழைத்து உள்ளார். அதற்கு இளம்பெண் மறுத்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாய படுத்தினார்.

அப்போது நவீன்குமார் அருகே இருந்த கோவிலில் இருந்த மஞ்சல் கயிரை இளம் பெண்ணின் கழுத்தில் கட்டிவிட்டு பின்னர் விடியும் வரை இளம்பெண்ணிடம் உல்லாசத்தில் இருந்துள்ளார்.

மறுநாள் காலை மகளை காணாமல் தேடிவந்த பெற்றோர் காதலர்கள் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் நவீன்குமாரிடம் தனது மகளை முறைப்படி திருமணம் செய்து கொள் என்று கேட்டனர்.

அதற்கு நவீன்குமார் நான் உன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது. என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார், வழக்குபதிந்து, நவீன்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News