செய்திகள்

மு.க.ஸ்டாலின் ஆளுமை திறமை அற்றவர்- அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு

Published On 2019-04-27 11:52 GMT   |   Update On 2019-04-27 11:52 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு செயலற்ற ஆளுமைத்திறனற்ற தலைவர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

கொடைக்கானல்:

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

கொடைக்கானலுக்கு அதிகமான திட்டங்களை நிறைவேற்றபட உள்ளது. சீசன் நேரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக நவீன கார்பார்க்கிங் வசதி அமைக்க விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும். ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். மூணாறு சாலையை விரைவில் திறக்கப்படும். இதற்காக விரிவான திட்ட அறிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்வேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு செயலற்ற ஆளுமைத்திறனற்ற தலைவர். அ.தி.மு.கவில் வெற்றிபெற்று அதிகமான பணம் சம்பாதித்து தற்போது பதவி ஆசையில் இங்கு சம்பாதித்த பணத்தை தி.மு.க.வில் சேர்ந்து சீட் வாங்கி செலவு செய்து வரும் செந்தி ல்பாலாஜி அரசியல் நாகரீகம் அற்றவர். அ.தி.மு.க.வால் அடையாளம் காட்டப்பட்ட அவர் தி.மு.க.வில் பதவி சுகத்துக்காக சேர்ந்தது ஒரு பச்சோந்திதனம். கொடைக்கானல் கீழ்மலை விவசாயிகளின் வசதிக்காக பழச்சாறு பதப்படுத்தும் கிடங்கு அமைக்க கூட்டுறவு வேளாண்துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News