செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும்- எஸ்.பி. வேலுமணி பேட்டி

Published On 2019-04-18 11:28 GMT   |   Update On 2019-04-18 14:41 GMT
அ.தி.மு.க. கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று வாக்களித்த பின் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். #ministerspvelumani #TNElections2019 #admk

கோவை:

கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஓட்டுப் போட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொருவரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செய்த ஜெயலலிதாவின் அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும். வாக்குச்சீட்டு முறையை விட புதிதாக தொழில் நுட்ப ரீதியில் வந்த இந்த வாக்கு எந்திரம் நன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #ministerspvelumani #TNElections2019 #admk

Tags:    

Similar News