செய்திகள்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் மோதல்- நோயாளிகள் ஓட்டம்

Published On 2019-04-17 09:48 GMT   |   Update On 2019-04-17 10:56 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் நோயாளிகள் பயந்து ஓட்டம் பிடித்தனர். #VirudhachalamClash
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அம்புஜவல்லிபேட்டையில், இரண்டு குடும்பத்தினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர்  தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக வந்தனர்.

அப்போது, இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் பயந்துபோன மற்ற நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் வந்து இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #VirudhachalamClash
Tags:    

Similar News