செய்திகள்

பண்ருட்டி அருகே வேன் டிரைவர் குத்திக் கொலை

Published On 2019-04-15 06:40 GMT   |   Update On 2019-04-15 06:40 GMT
பண்ருட்டி அருகே வேன் டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சண்முகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 21) வேன் டிரைவர்.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் விஜயகுமார் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே விஜய குமார் கடப்பாரையால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விஜயகுமாரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

விஜயகுமாரை கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News