செய்திகள்
அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும் - நடிகர் விசு
கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி என்று நடிகர் விசு கூறினார். #LokSabhaElections2019 #ADMK
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் விசு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்துகணிப்புகள் கூறுவதாக சொல்கிறார்கள். நான் எத்தனையோ கருத்துக்கணிப்புகளை பார்த்தவன். கருத்துக்கணிப்புகளை கண்டு பயப்படப்போவதில்லை. கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி.
காஷ்மீரில் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் குண்டு போட்டது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வருத்தம் தான் தெரிவித்தார். ஆனால் இப்போது நடந்த தாக்குதலுக்கு அடுத்த 15 நாளில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக மாறி நமது நாட்டையும், பிரதமரையும் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் இவர்களை ஏதோ ஒரு அன்னிய சக்தி இயக்குகிறது உறுதியாகி விட்டது. அடுத்து 5 ஆண்டுகளுக்கு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியா உலக அளவில் நம்பர் ஒன் நாடாக விளங்கும். எனவே நீங்கள் பா.ஜ.க.வை ஆதரியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ADMK
கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் விசு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்துகணிப்புகள் கூறுவதாக சொல்கிறார்கள். நான் எத்தனையோ கருத்துக்கணிப்புகளை பார்த்தவன். கருத்துக்கணிப்புகளை கண்டு பயப்படப்போவதில்லை. கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி.
காஷ்மீரில் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் குண்டு போட்டது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வருத்தம் தான் தெரிவித்தார். ஆனால் இப்போது நடந்த தாக்குதலுக்கு அடுத்த 15 நாளில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக மாறி நமது நாட்டையும், பிரதமரையும் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் இவர்களை ஏதோ ஒரு அன்னிய சக்தி இயக்குகிறது உறுதியாகி விட்டது. அடுத்து 5 ஆண்டுகளுக்கு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியா உலக அளவில் நம்பர் ஒன் நாடாக விளங்கும். எனவே நீங்கள் பா.ஜ.க.வை ஆதரியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ADMK