செய்திகள்

நாட்டுக்கு நல்ல திட்டங்களை தந்த டி.ஆர்.பாலுவுக்கு வாக்களியுங்கள் - வைகோ பிரசாரம்

Published On 2019-04-03 10:02 GMT   |   Update On 2019-04-03 10:02 GMT
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். #LokSabhaElections2019 #DMK

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ. தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரம், பழவன்தாங்கல். தாம்பரம் ஆகிய பகுதியில் வீதிவீதியாக மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: -

டி.ஆர்.பாலு மிசா கொடுமையை அனுபவித்தவர் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர்.மேலும் பல நல்ல திட்டங்களை செய்திட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.அதிமுக மத்திய அரசிடம் கைகட்டி சேவகம் செய்கிறது.

நீட் தேர்வில் பிஜேபியும், அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு துரேகம் இழைத்துவிட்டது. பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றிட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை லட்சக்கணக்கான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்திடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மாசுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி. எஸ்ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #DMK

Tags:    

Similar News