செய்திகள்
கோப்புப்படம்

பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது - அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்

Published On 2019-04-01 15:55 IST   |   Update On 2019-04-01 15:55:00 IST
காஞ்சிபுரம் அருகே அரசுப் பள்ளியில் வகுப்பு நடந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #SchoolAccident #RoofFellDown
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள காவாந்தண்டலம் என்ற ஊரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு இன்று மதியம் பள்ளி மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இடிந்து விழுந்த பகுதிக்கு ஆசிரியர்கள் சென்று பார்த்தனர். ஆனால் அங்கு மாணவர்கள் யாரும் இல்லை.

மாணவர்கள் உணவு இடைவேளைக்கு வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. #SchoolAccident #RoofFellDown

Similar News