செய்திகள்

விருதுநகரில் விபத்து: பேக்கரி அதிபர்-மனைவியுடன் பலி

Published On 2019-03-21 04:55 GMT   |   Update On 2019-03-21 04:55 GMT
விருதுநகரில் இன்று அதிகாலையில் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி அதிபர் மனைவியுடன் விபத்தில் பலியானார்.

விருதுநகர், மார்ச்.21-

பங்குனி உத்திர வழிபாட் டுக்கு சென்ற பேக்கரி அதிபர் மனைவியுடன் விபத்தில் பலியானார்.

திருப்பூரில் பேக்கரி கடை நடத்தி வந்தவர் கோபால் யாதவ் (வயது 53). இவரது மனைவி கிருஷ்ணவேணி (48). இவர்களது மகன் சுடலைமணி (25).

இவர்கள் பங்குனி உத்திர வழிபாட்டுக்காக குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே நடுவக்குறிச்சியில் அவர்களின் குல தெய்வமான சாஸ்தா கோவில் உள்ளது.

விழாவில் பங்கேற்க நேற்று இரவு கோபால் உள்பட 3 பேரும், காரில் புறப்பட்டனர். காரை சுடலைமணி ஓட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் விருதுநகர் -சாத்தூர் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

அங்குள்ள நடுவப்பட்டி விலக்கில் கியாஸ் சிலிண்டர் லாரி நிறுத்தப்பட்டு இருந் தது. அதனை சுடலைமணி சரியாக கவனிக்கவில்லை.

லாரியின் அருகே வந்ததும் சுதாரித்த சுடலை மணி, காரை நிறுத்த முயன்றார். அதற்கு பலன் இல்லை. வேகமாக வந்த கார் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காருக்குள் இருந்த கோபால் அவரது மனைவி கிருஷ்ண வேணி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரை ஓட்டி வந்த சுடலைமணி படுகாயத்துடன் மீட்கப் பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து வச்சக் காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். * * * திரிபுரா மாநிலம் அகர்தலாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். பொதுக்கூட்ட மேடையில் பெண் ஒருவர் அவரை பாராட்டி சால்வை அணிவித்தார். * * * பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News