செய்திகள்

5 கி.மீ. தொலைவில் வாக்குசாவடி மையம் - தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

Published On 2019-03-18 07:34 GMT   |   Update On 2019-03-18 07:34 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் செல்லப்ப கவுண்டன்புதூரில் வாக்குப்பதிவு மையம் அமைக்கவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க அப்பகுதி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். #Parliamentelection
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியில் செல்லப்ப கவுண்டன்புதூர் கிராமம் உள்ளது.

7, 12 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய இந்த கிராமத்தில் 1,056 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு இங்கு உள்ள வாக்காளர்கள் ஓட்டுபோட வாக்குப்பதிவு மையம் மாதம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. மாதம்பட்டியில் உள்ள இந்த வாக்குப்பதிவு மையம் 5 கி.மீ. தொலைவில் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் வாக்குப்பதிவு மையத்தை உள்ளூரிலேயே அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் செல்லப்ப கவுண்டன்புதூரில் வாக்குப்பதிவு மையம் அமைக்கவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Parliamentelection

Tags:    

Similar News