செய்திகள்

திருவண்ணாமலை அருகே மரத்தில் மினி லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு

Published On 2019-03-09 09:22 GMT   |   Update On 2019-03-09 09:22 GMT
திருவண்ணாமலை அருகே மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். #MiniLorryAccident #TVMalai
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே கொண்டம் பகுதியில், மாடுகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் ஒரு மினி லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி லாரி, சிறிது நேரத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இதில், மினி லாரியின் முன்பகுதி நொறுங்கியது. அதில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MiniLorryAccident #TVMalai
Tags:    

Similar News