செய்திகள்

தேசிய கட்சிகளுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது- தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

Published On 2019-01-30 10:35 GMT   |   Update On 2019-01-30 10:35 GMT
தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #thangatamilselvan #bjp #parliamentelection

ஆரணி:

ஆரணி அடுத்த நேத்தப்பாக்கத்தில் அ.ம.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது-

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் 4வது இடத்திற்கு செல்லும். நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறுவார்கள்.

தேசிய கட்சிகளுடன் ஓரு போதும் அ.ம.மு.க. கூட்டணி அமைக்காது. பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அ.ம.மு.க. தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. அடுத்து ஆட்சியை நிச்சயமாக பிடிக்கும் என்று கூறி வருகிறார். ஆர்.கே.நகர் இடைதேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது.

ஜெயலலிதா, கருணாநிதி இறப்பிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தினகரன் நிரப்புவார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு நிரந்தமான தலைவராக தினகரன் இருப்பார். 

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட செயலாளர் வரதன், ஆரணி தொகுதி பொறுப்பாளர் பார்த்தீபன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, நகர செயலாளர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நேத்தப்பாக்கம் சரவணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thangatamilselvan #bjp #parliamentelection

Tags:    

Similar News