செய்திகள்

மு.க.ஸ்டாலின் நடிப்பு மக்களிடம் எடுபடாது- செல்லூர் ராஜூ பேச்சு

Published On 2019-01-28 10:43 GMT   |   Update On 2019-01-28 10:43 GMT
மு.க.ஸ்டாலின் நடிப்பு மக்களிடம் எடுபடாது என்று அமைச்சர் செல் லூர் ராஜூ பேசினார். #ministersellurraju #mkstalin

மதுரை:

அ.தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை பெத்தானியாபுரத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

தமிழகத்தில் அம்மா வழியில் சிறப்பான ஆட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தந்து வருகிறார். தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1,000 வழங்கிய அரசு அம்மாவின் அரசு.

இந்த அரசு மீது எதிர்க் கட்சிகள் தினமும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை குறைகூறியும், பொய்யையும் விதைக்கிறார்.

கிராமங்கள் தோறும் சென்று கிராம சபை கூட்டம் நடத்துகிறார். அவர் நடத்துவது கிராம சபை கூட்டம் அல்ல, தி.மு.க.வினரை வைத்துக் கொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

துணை முதல்-அமைச்சராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எத்தனை கிராமங்களுக்கு சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தார். எதுவும் செய்யவில்லை. இப்போது மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறார்.

அவரது நடிப்பை மக்கள் நம்ப மாட்டார்கள். மு.க. ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டது என்றால் தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என்று அவருக்கு சவால் விடுகிறேன். அவரது முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, சோலைராஜா, முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #ministersellurraju #mkstalin

Tags:    

Similar News