செய்திகள்

சென்னையில் சாலை விபத்து குறைந்துள்ளன- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2019-01-05 10:04 GMT   |   Update On 2019-01-05 10:04 GMT
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் சென்னையில் 8.6 சதவீதமாக இருந்த விபத்துக்கள் தற்போது 2.8 சதவீதமாக குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கே.பி.பி.சாமி (தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில் வருமாறு:-

திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். உறுப்பினர் கோரிக்கை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் சாலையோரம் பகுதியில் உள்ள 75 இடங்களில் விபத்து சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ.190 கோடி ஒதுக்கி உள்ளது.

மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை, கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் விபத்து நிலைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் சென்னையில் 8.6 சதவீதமாக இருந்த விபத்துக்கள் தற்போது 2.8 சதவீதமாக குறைந்துள்ளது என்றார்.

Tags:    

Similar News