செய்திகள்

உடும்பு கறி சமைத்தவரை கைது செய்யாமல் இருக்க ரூ.2500 லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் சிறையில் அடைப்பு

Published On 2018-12-29 04:58 GMT   |   Update On 2018-12-29 04:58 GMT
சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உடும்பு கறி சமைத்தவரை கைது செய்யாமல் இருக்க ரூ.2500 லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் சிறையில் அடைக்கப்பட்டார். #bribe

சேலம்:

சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டியை சேர்ந்தவர் மலையன். இவரது வளர்ப்பு நாய் அங்குள்ள மலைப்பகுதியில் ஒரு உடும்பை பிடித்து வந்தது. அதனை மலையன் வீட்டில் சமைத்து வைத்திருந்தார்.

தகவல் அறநித ராசிபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமானூர் வனக்காப்பாளர் சுப்பிரமணி மலையன் வீட்டிற்கு சென்று உடும்பை பிடித்து சமைத்ததற்காக வன விலங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்போவதாக மிரட்டினார்.

மேலும் கைது செய்யாமல் இருக்க ரூ.20 ஆயிரம் கொடுக்குமாறு ம் கூறினார். இதனால் பயந்து போன மலையன் ரூ.1500 கொடுத்தார். அப்போது மேலும் 10 ஆயிரம் ரூபாய் கேட்ட வனக்காப்பாளர் சுப்பிரமணி உடனே ரூ. 2500 தர வேண்டும் என கூறி மிரட்டினார்.

மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மலையன் இந்த சம்பவம் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் படி நேற்று தும்பல்பட்டிக்கு வந்த வனக்காப்பாளர் சுப்பிரமணியனிடம் ரூ.2500 -ஐ மலையன் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேறு நபர்களிடம் இப்படி மிரட்டி பணம் வாங்கினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சுப்பிரமணி விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார் என வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #bribe

Tags:    

Similar News