செய்திகள்

அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் - ரெயில்கள் நிறுத்தம்

Published On 2018-12-05 04:10 GMT   |   Update On 2018-12-05 04:10 GMT
அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். #CrackonRailwayTrack
வேலூர்:

அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டை பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டது. இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.



தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், காட்பாடி வழியே செல்லும் யஷ்வந்த்பூர், கவுஹாத்தி, கோவை, பெங்களூரு டபுள் டெக்கர் ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 2 மணிநேரத்திற்கும் மேலாக ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.  #CrackonRailwayTrack
Tags:    

Similar News