செய்திகள்
புயல் சேதங்களை முறையாக கணக்கிட முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவேன்- திருமாவளவன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கிட முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #Edappadipalanisamy
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கீரமங்கலம், பனங்குளம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலங்குடி தொகுதியில் லட்சக்கணக்கான பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரத்துக்கு ரூ.1,100 என்பதை போல, பலா மரங்களுக்கும் அரசு நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும். உயரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தென்னைக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அரசு வாகனம் எரிப்பு வழக்கில் சில மர்மநபர்கள் செய்த தவறுக்கு, 62 அப்பாவி மக்களை கைது செய்தது தவறு. அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.
சேதமடைந்த அனைத்து மரங்களையும் உரிய முறையில் வருவாய் துறையினர் கணக்கிடவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சேதங்களை முறையாக கணக்கிட்டு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Edappadipalanisamy
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கீரமங்கலம், பனங்குளம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலங்குடி தொகுதியில் லட்சக்கணக்கான பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை மரத்துக்கு ரூ.1,100 என்பதை போல, பலா மரங்களுக்கும் அரசு நிவாரண தொகையை நிர்ணயிக்க வேண்டும். உயரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தென்னைக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அரசு வாகனம் எரிப்பு வழக்கில் சில மர்மநபர்கள் செய்த தவறுக்கு, 62 அப்பாவி மக்களை கைது செய்தது தவறு. அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்.
சேதமடைந்த அனைத்து மரங்களையும் உரிய முறையில் வருவாய் துறையினர் கணக்கிடவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சேதங்களை முறையாக கணக்கிட்டு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். இது குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #Edappadipalanisamy