செய்திகள்
முன்னாள் எம்எல்ஏ சந்தானம்

உசிலம்பட்டியில் முன்னாள் எம்எல்ஏ சந்தானம் மரணம்- நாளை உடல் அடக்கம்

Published On 2018-11-24 05:54 GMT   |   Update On 2018-11-24 05:54 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ. சந்தானம் இன்று மரணம் அடைந்தார்.
மதுரை:

பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.சந்தானம் (வயது 80). தமிழ் மாநில தலைவராக பதவி வகித்த சந்தானம் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.

சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், உசிலம் பட்டி அருகே மேலப்பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வந்தார். சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இந்த நிலையில் இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சந்தானம் உடல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேலப்பெருமாள் பட்டியில் அடக்கம் செய்யப்படுகிறது. மரணமடைந்த சந்தானத்துக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
Tags:    

Similar News