செய்திகள்

கஜா புயல் பாதிப்பு குறித்து உள்துறைக்கு தெரிவிக்கப்படும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-11-20 04:51 GMT   |   Update On 2018-11-20 04:51 GMT
கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #GajaCycone #PonRadhakrishnan #BJP
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பிறகு புயலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களை  சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள் குறிப்பாக தென்னை மரங்கள் மொத்தமாக சாய்ந்துள்ளது.

நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குடிசை வீடுகளும் சேதமாகி உள்ளது. சேதமான வீடுகளை சீரமைக்கும் வரை இந்த மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #BJP #PonRadhakrishnan
Tags:    

Similar News