செய்திகள்

பட்டதாரி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வாலிபர்- ஆபாச படங்களை இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாகவும் மிரட்டல்

Published On 2018-11-13 16:22 GMT   |   Update On 2018-11-13 16:22 GMT
மார்த்தாண்டம் அருகே பட்டதாரி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி. மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜித் (வயது 30). எம்.டெக். பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் மீது திருவட்டார் ஆற்றூரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் எம்.இ. படித்து விட்டு சென்னையில் பணியாற்றி வருகிறேன். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் சுஜித்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். நானும் அவரை நம்பி என்னையே கொடுத்தேன். ஒருமுறை வீட்டில் நான் தனியாக இருந்தபோது சுஜித் என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

சென்னை, வேளாங்கண்ணி, பெங்களூர் என பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று அவர் கற்பழித்தார். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோது அவர் மறுப்பு தெரிவிக்கிறார்.

அப்படியே உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ரூ.15 லட்சம் ரொக்கம், 150 பவுன் நகை, ஒரு கார், பாங்கியில் ரூ.25 லட்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என வரதட்சணை கேட்கிறார். மேலும் இந்த பிரச்சினையை பெரிதாக்கினால் நாம் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் எனவும் மிரட்டுகிறார்.

எனவே என்னை கற்பழித்து ஏமாற்றிய சுஜித் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இதையடுத்து சுஜித் மீது கற்பழிப்பு, பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சுஜித் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். சுஜித் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews
Tags:    

Similar News