செய்திகள்
குடோனில் பதுக்கப்பட்டிருந்த குட்கா மூட்டைகளை போலீசார் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல்

Published On 2018-11-09 09:11 GMT   |   Update On 2018-11-09 09:11 GMT
பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் அளவிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி:

சென்னை தனிப்படை போலீசார் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பதுக்கி வைத்துள்ள இடங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கடந்த மாதம் அடையாறை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை குட்கா பதுக்கி வைத்ததாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. அதனை தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குடோனில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அடையார் துணை கமி‌ஷனர் சகாயி காங் உத்தரவின் பேரில் 5 பேர் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு மூட்டை மூட்டையாக பான்மசாலா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் இருந்தன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். சுமார் 10 டன் அளவிலான புகையிலை பொருட்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.80 லட்சம்.

குட்கா பதுக்கி இருந்த குடோன்கள் உரிமையாளர் செந்தில் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது சகோதரர் முத்துலிங்கம் உள்ளிட்ட 5 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடோன் உரிமையாளர் செந்திலிடம் இருந்து ஏற்கனவே குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News