செய்திகள்

புதுவாயல்-பழவேற்காடு 4 வழிச்சாலையை எதிர்த்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-11-02 07:13 GMT   |   Update On 2018-11-02 07:13 GMT
புதுவாயல்-பழவேற்காடு 4 வழிச் சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னக்காவனம் பகுதியில் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். #Publicprotest

பொன்னேரி:

புதுவாயல் முதல் பழவேற்காடு வரை நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை பொன்னேரி அருகே உள்ள சின்னக்காவனம் கிராமம் வழியே செல்கிறது.

இந்த சாலையில் சின்னக் காவனம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், பழமையான 6 கோவில் இடிக்கப்படும் நிலை உள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கிராம மக்களிடம் கருத்து கேட்காமல் சாலை விரிவாக்கப்பணி நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் 4 வழிச் சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னக்காவனம் பகுதியில் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்து உள்ளனர்.

இதனால் சின்னக் காவனம் பகுதி வெறிச் சோடி காணப்படுகிறது. கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளது.

4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News