செய்திகள்

பூந்தமல்லியில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

Published On 2018-10-11 04:36 GMT   |   Update On 2018-10-11 04:36 GMT
பூந்தமல்லி அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

பூந்தமல்லி கண்டோன்மென்ட் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(25) தொழிலாளி.

இவருடைய மனைவி துர்கா(23). இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுப்ரியா(2),சிவன்யா(1) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

வெங்கடேசன் அடிக்கடி குடித்துவிட்டு வருவார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு வெங்கடேசன் தனது 2 குழந்தைகளையும் அருகில் உள்ள துர்காவின் பாட்டி மீராபாய் வீட்டில் விட்டு விட்டு வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தைகள் அழுதன.

துர்காவின் பாட்டி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். கதவு பூட்டிக் கிடந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். பின்புற ஜன்னலை திறந்து பார்த்த போது துர்கா கட்டிலில் அசைவற்று படுத்து இருந்தார். வெங்கடேசன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். கதவை உடைத்து உள்ளே சென்ற போது துர்கா பிணமாக கிடந்தார். வெங்கடேசனையும் கீழே இறக்கினார்கள். குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு, வெங்கடேசன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.


மனைவியை கொலை செய்வதற்காக தான், வெங்கடேசன் தனது குழந்தைகளை மனைவியின் பாட்டி வீட்டில் விட்டு வந்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

பிணமாக கிடந்த துர்காவின் உடலில் காயங்கள் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே துர்கா கொலை பற்றிய விவரம் தெரிய வரும்.
Tags:    

Similar News