செய்திகள்

அரை மணிநேரமாக பாதிக்கப்பட்டிருந்த 108 அவசர சேவை சீரானது

Published On 2018-10-08 10:21 GMT   |   Update On 2018-10-08 10:21 GMT
அவசர உதவிக்கு தொடர்புகொள்ளும் 108 எண் சேவை அரை மணி நேரமாக தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தொடர்பு சீராகியுள்ளது. #108 #Emergency
சென்னை:

ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர வசதிக்கு நாடு முழுவதும் 108 என்ற தொலைபேசி எண் அமலில் உள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் இணைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 108 எண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தது. 
இதனால், தற்காலிகமாக 044-40170100 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது, கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து 108 எண் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News