செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் பற்றி தினகரன் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் கருப்பணன்

Published On 2018-10-06 10:13 GMT   |   Update On 2018-10-06 10:13 GMT
துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் குறித்து தினகரன் கூறும் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinakaran #OPanneerselvam
ஈரோடு:

ஈரோடு அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஓ. பன்னீர் செல்வம் தன்னை சந்தித்தாக டி.டி.வி. தினகரன் கூறியிருப்பது தொடர்பாக அமைச்சர் கருப்பணனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:-

தினகரன் கூறி வரும் கருத்து பற்றி கவலை இல்லை. அதற்கு கருத்து கூறவும் விரும்பவில்லை. ஒவ் வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகின்றனர்.

கமல்ஹாசன் ஒரு கருத்து கூறுகிறார். தினகரன் ஒரு கருத்து கூறுகிறார். ஆனால் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவரகளது ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு, ‘‘இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’’ என்றார்.

மழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வருவாய்துறை ஊழியர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் விழிப்புடன் செயல்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் மழை குறித்து அச்சப்படத் தேவையில்லை.ஆற்றில் சாயக்கழிவு நீரை கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 சாயப்பட்டறை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் இதுகுறித்து புகார் வந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி .ராமலிங்கம் , கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் அருகில் இருந்தனர். #ADMK #TTVDhinakaran #OPanneerselvam
Tags:    

Similar News