செய்திகள்

முக ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபடுவோம்- தாமோ அன்பரசன்

Published On 2018-09-07 09:45 GMT   |   Update On 2018-09-07 09:45 GMT
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய அயராது பாடுபடுவோம் என்று தி.மு.க. செயற்குழுவில் தா.மோ. அன்பரசன் பேசினார். #DMK #MKStalin
சென்னை:

காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் கிழக்கு தாம்பரத்தில் நடந்தது.

அவைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானங்கள் வருமாறு:-

தி.மு.க.வின் தகுதி வாய்ந்த தலைவராக மு.க.ஸ்டாலினை பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்ததற்காக காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் காட்டும் நல்வழியில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பீடுநடை போட்டு தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய இந்த மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம். இந்த வெற்றிக்கனியை மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்போம் என்று சப்தம் ஏற்போம்.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதியை எழுச்சியுடன் கொண்டாடுவது, முப்பெரும் விழாவில் ஆயிரக்கணக்கில் சென்று பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  #DMK #MKStalin
Tags:    

Similar News