செய்திகள்
விவாகரத்து செய்த பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
விவாகரத்து செய்த பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோபி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோபி:
கோபி அருகே உள்ள உக்கரம் மில் மேட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர். கூலி தொழிலாளி. இவர் நந்தினி (வயது 28) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தரணிதரன் என்ற மகன் உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீதரும், நந்தினியும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் கடந்த 2.4.2017 அன்று உக்கரத்தில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் நந்தினி சோளத்தட்டு பயிர்களை அறுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீதர் தகாத வார்த்தைகளால் பேசி தான் கொண்டு வந்த கத்தியால் குத்தினார். இதில் நந்தினி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீதரை கைது செய்தனர்.
பின்னர் கோபி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. ஸ்ரீதருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீதிபதி மணி தீர்ப்பு கூறினார்.
கோபி அருகே உள்ள உக்கரம் மில் மேட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர். கூலி தொழிலாளி. இவர் நந்தினி (வயது 28) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தரணிதரன் என்ற மகன் உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீதரும், நந்தினியும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் 2 பேரும் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில் கடந்த 2.4.2017 அன்று உக்கரத்தில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் நந்தினி சோளத்தட்டு பயிர்களை அறுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீதர் தகாத வார்த்தைகளால் பேசி தான் கொண்டு வந்த கத்தியால் குத்தினார். இதில் நந்தினி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீதரை கைது செய்தனர்.
பின்னர் கோபி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. ஸ்ரீதருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீதிபதி மணி தீர்ப்பு கூறினார்.