செய்திகள்

குடிநீர் கட்டணத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம்- ஜி.கே.மணி அறிவிப்பு

Published On 2018-08-30 20:48 IST   |   Update On 2018-08-30 20:48:00 IST
கொளத்தூர் பேரூராட்சியில் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #gkmani
சேலம்:

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சியில் முதலில் குடிநீர் கட்டணம் ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு ரூ.60 -ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது வீடுகளுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும், கடைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டு, இக்கட்டணம் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.  

இக்கட்டணத்தை பொதுமக்களால் செலுத்த இயலாத நிலை உள்ளது. எனவே, உயர்த்திய குடிநீர் கட்டணத்தை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை ஒன்று திரட்டி எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். #gkmani
Tags:    

Similar News