செய்திகள்
வேலூரில் நாளை டி.டி.வி. தினகரன் பொதுக்கூட்டம்- நலத்திட்ட உதவி வழங்கி பேசுகிறார்
வேலூரில் நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். #dinakaran
வேலூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் வேலூர் மத்திய மாவட்டங்களின் சார்பில் ஏழை, எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு வேலூர் மாங்காய் மண்டி அருகே நடைபெறுகிறது.
இதில் கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி. பார்த்திபன் தலைமை தாங்குகிறார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்று பேசுகிறார். இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் மத்திய மாவட்ட செயலாளர் கலையரசு, மண்டல பொறுப்பாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கட்சி அவைத் தலைவர் அன்பழகன், பொருளாளர் ரங்கசாமி, தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்பு செயலாளர்கள் செந்தில் பாலாஜி, சி.கோபால், ஞானசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இதனையொட்டி வேலூர் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வரவேற்பு பேனர்கள் கொடி தோரணங்கள் கட்டியுள்ளனர். விழாவிற்கு மாங்காய் மண்டி அருகே சிலம்பு தியேட்டர் எதிரில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. #dinakaran