செய்திகள்
கோபி அருகே விபத்து- டிரைவர் உள்பட 6 பேர் காயம்
கோபி அருகே இன்று காலை பனியன் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் அத்தாணியில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை ஒரு வேன் புறப்பட்டது.
வேனை திருப்பூரை சேர்ந்த முருகன் (வயது 26) என்பவர் ஓட்டினார். வேனில் சுமதி, குமார், சரசாள், மகாலட்சுமி உள்பட 5 பேர் இருந்தனர்.
அந்த வேன் இன்று காலை கோபி அருகே அந்தியூர் சாலையில் உள்ள புதுக்கரைப்புதூர் என்ற இடத்தில் வந்தபோது நிலை தடுமாறி ஓடியது.
இதனால் அந்த வேன் ரோட்டோரத்தில் வயல் வெளியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் முருகன், வேனில் இருந்த தொழிலாளர்களான சுமதி, குமார், சரசாள், மகாலட்சுமி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அத்தாணியில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை ஒரு வேன் புறப்பட்டது.
வேனை திருப்பூரை சேர்ந்த முருகன் (வயது 26) என்பவர் ஓட்டினார். வேனில் சுமதி, குமார், சரசாள், மகாலட்சுமி உள்பட 5 பேர் இருந்தனர்.
அந்த வேன் இன்று காலை கோபி அருகே அந்தியூர் சாலையில் உள்ள புதுக்கரைப்புதூர் என்ற இடத்தில் வந்தபோது நிலை தடுமாறி ஓடியது.
இதனால் அந்த வேன் ரோட்டோரத்தில் வயல் வெளியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் முருகன், வேனில் இருந்த தொழிலாளர்களான சுமதி, குமார், சரசாள், மகாலட்சுமி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.