செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியபோது எடுத்தபடம்.

கனமழை எதிரொலி: தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜிகே வாசன்

Published On 2018-06-13 04:28 GMT   |   Update On 2018-06-13 04:28 GMT
மழை காலமாக இருப்பதால் மலைப்பாங்கான இடங்களில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள், பொருட்சேதத்தை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் கூறினார்.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள பட்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ் எஸ். சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். த.மா.க வின் மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், துணை தலைவர் ஆறுமுகம் பொது குழு உறுப்பினர் எஸ்.பி.சந்திரசேகர் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தற்போது மழை காலமாக இருப்பதால் மலைப்பாங்கான இடங்களில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் மற்றும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும். 27 மாவட்டங்களுக்கு உயிர் நாடியாக விளங்கும் காவிரி குடி நீர் ஆதாரம் டெல்டா பகுதிகளுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டும் கர்நாடக அரசு ஏன் இன்னும் உறுப்பினர்களை நியமனம் செய்யவில்லை? இது விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையாகும் தமிழக அரசு வலுவான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை.

நீதி மன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசு மீது மத்திய அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் சத்தியமங்கலத்தில் இருந்து அம்மாபேட்டை வரையிலும் பவானியில் இருந்து தொப்பூர் வரையிலும் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை உடனடியாக செயல்படுத்த வேன்டும்

ஒரே கோப்பில் கையெழுத்து போட்டு மதுவை ஒழிக்க முடியாது படிப்படியாக குறைக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் டாஸ்மார்க் விசயத்தில் அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நோக்கமாகும். அதற்காக ஒரு கோடி கையெழுத்து பெற்று கவர்னரிடம் கொடுத்த கட்சி த.மா.க மட்டுமே. த.மா.க.தனித்துவம் வாய்ந்தது. தனித்தே செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan
Tags:    

Similar News