செய்திகள்

மாணவி பிரதீபா மரணம்: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

Published On 2018-06-06 04:15 GMT   |   Update On 2018-06-06 04:15 GMT
‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா தற்கொலை கொண்டது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.#NEET2018 #Pratheeba TNStudentSuicide
சென்னை:

‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது. இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அநீதிகளை ஏற்படுத்தி வருகின்றன. அநீதியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராட்டங்களுக்கான வியூகங்களை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை கேட்டுக்கொள்கிறேன்.

‘நீட்’ தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது நெஞ்சத்தை பிழிகிறது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவின் கதிதான் என்ன? ‘நீட்’ தேர்வால் தமிழ்நாட்டுக்கு 1,450 இடங்கள் பறிபோய்விட்டது. இதனை பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை. இதற்கொரு முடிவு கண்டாக வேண்டும்.

‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து மாாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘நீட்’ தேர்வு ஏழைகளின் மருத்துவ கல்வி வாய்ப்பை பறிப்பதற்கான கருவியாக மாறியுள்ளது.

‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் பிரதீபா இன்னுயிரை மாய்த்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கல்வியை தரமானதாக மேலும் முன்னேற்றி ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் அளவுக்கு மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சியளிக்கவேண்டும். மாணவர்களும் கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல் தைரியமாக எதிர்காலத்தை எதிர்கொள்ளவேண்டும்.

‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கனவு ஈடேறாத துக்கத்தில் மாணவி பிரதீபா தற்கொலை செய்துள்ளார். ‘நீட்’ தேர்வால் தமிழகத்தில் அனிதாவின் உயிர் காவுக்கொள்ளப்பட்டது. இப்போது பிரதீபாவை அது பலி வாங்கியிருக்கிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சுருக்கிவிட்ட ‘நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் ஒழிக்கப்படவேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ‘நீட்’ தேர்வில் சந்தித்த தோல்வி காரணமாக தற்கொலை செய்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாநில வளர்ச்சி, தமிழக மாணவர்களின் எதிர்காலம், தமிழக இளைஞர்களின் கனவு போன்றவற்றை சிதைக்கும் ஒரு தேசிய கொள்கை தமிழகத்துக்கு தேவை இல்லை. இந்த கருத்தை அனைத்து தமிழக தலைவர்களும் ஒருமித்த குரலுடன் உரைத்தால் தான் ‘நீட்’ தேர்வுக்காக தற்கொலை செய்யும் மாணவர்களின் துயர நிலை மாறும்.

‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதீபாவின் உயிரிழப்புக்கு ‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசும், விலக்கு பெற்றுத்தர முடியாத தமிழக அரசும் தான் காரணம். பிரதீபா குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பெரவளூர் கிராமத்துக்கு சென்று மாணவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, சென்ற ஆண்டு அனிதா என்கிற மாணவி இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.

இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். #NEET2018 #Pratheeba TNStudentSuicide
Tags:    

Similar News