செய்திகள்

ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம்-ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-06-04 09:28 GMT   |   Update On 2018-06-04 09:28 GMT
தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்க வேண்டாம் என சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். #TNAssembly #OPS
சென்னை:

சட்டசபையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதற்கும், அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததற்கும் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து பேசினார்கள்.

அப்போது பேசிய அமைச்சர் காமராஜ், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று குறிப்பிட வேண்டாம். எல்லோரும் என்னை இப்படி அழைத்தால் ஜல்லிக்கட்டு போட்டியை நான் வேடிக்கை பார்க்க சென்றாலும் ஜல்லிக்கட்டு நாயகன் வந்து விட்டார். அவர் காளையை அடக்குவார் என்று அறிவித்து விட்டால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும். எனவே என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம்” என்றார்.

அதனால் சபையில் சிரிப்பலை ஏற்பட்டது. #TNAssembly #OPS
Tags:    

Similar News