செய்திகள்

22 ஆண்டுகளாக வெளிப்படையாக ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம் - ஸ்டெர்லைட் நிர்வாகம்

Published On 2018-05-28 15:35 GMT   |   Update On 2018-05-28 15:35 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமான ஒன்று என ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #SterliteShut
பெங்களூர்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. மேலும், ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது துரதிர்ஷ்டவசமான முடிவு. 22 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் நடத்தி வந்தோம். தமிழக அரசின் அரசாணையை படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News