செய்திகள்

மதுராந்தகத்தில் சாலை மறியல் - மு.க.ஸ்டாலின் கைது

Published On 2018-05-25 06:16 GMT   |   Update On 2018-05-25 06:16 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். #SterliteProtest #DMKBandh #MKStalinArrested
காஞ்சிபுரம்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் உருவானது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. இதையொட்டி அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டாலினை போலீசார் வேனில் ஏற்றியதும், வேனை அங்கிருந்து நகர விடாமல் தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  #SterliteProtest #DMKBandh #MKStalinArrested
Tags:    

Similar News