சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் வெடிகுண்டு பீதி
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், 2-வது நுழைவு வாயில் அருகே இன்று காலை கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.
அதனை பயணிகள் யாரும் எடுக்காததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் பீதி அடைந்தனர்.
இது குறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கவச உடை அணிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மர்ம பையை பாதுகாப்பாக எடுத்து சோதனை செய்தனர்.
அதில் பழைய துணிகள் மட்டும் இருந்தது. வெடி குண்டு எதுவும் இல்லை. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இந்த துணிப்பையை விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. #Chennaiairport #tamilnews