செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் இரட்டை கொலைக்கு பழிவாங்க வாலிபர் படுகொலை

Published On 2017-07-30 13:36 IST   |   Update On 2017-07-30 13:38:00 IST
ஸ்ரீபெரும்புதூரில் இரட்டை கொலைக்கு பழிவாங்க வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

திருவள்ளூரை அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ் (வயது 30).

இவர் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உணவு கழிவுகளை வாங்கும் தொழில் செய்து வந்தார்.

நேற்று மாலை ரமேஷ், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2012-ம் ஆண்டு மப்பேடு பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ரமேசும், அவரது அண்ணன் சுரேசும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

கடந்த ஆண்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். இரட்டை கொலை வழக்கில் அவர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரமேசும் கொலை செய்யபப்பட்டு இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரும் இரட்டை கொலைக்கு பழி வாங்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேசிடம், ராஜ் என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார். அவருடன் சென்றபோது ரமேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது ராஜ் தலை மறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News