செய்திகள்

உடல்நலம் பாதித்த கணவர் வேலைக்கு போக முடியாததால் மனைவி தீக்குளித்து பலி

Published On 2017-05-21 11:39 GMT   |   Update On 2017-05-21 11:40 GMT
சென்னிமலை அருகே உடல்நலம் பாதித்த கணவர் வேலைக்கு போக முடியாததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னிமலை:

சென்னிமலை,மேற்கு வெப்பிலி, அரிஜன காலானியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ராதா(வயது35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழனிசாமியும், ராதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இதன் காரணமாக பழனியால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தில் வறுமை வாட்ட தொடங்கியது.

இதனால் ராதா கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து ராதாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News