செய்திகள்

ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்தல்

Published On 2017-03-23 05:37 GMT   |   Update On 2017-03-23 05:37 GMT
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கனடா குடியுரிமை பெற்ற சின்னத்தம்பி என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சின்னத்தம்பியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த கோட்டில் ரகசிய பை வைத்து அதில் 2 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சின்னதம்பியிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News