செய்திகள்

ஜனாதிபதி சென்னை வருகை: விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

Published On 2017-02-28 13:49 IST   |   Update On 2017-02-28 13:49:00 IST
ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் ராணுவ விருது வழங்கும் விழா வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் டெல்லியில் இருந்து 60 சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Similar News