Union Buget 2026: சிறு குறு தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி.. மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விவரங்கள்
- பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
- வங்கித்துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
இந்தாண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சூழலில் இந்த பட்ஜெட்டில் அவற்றுக்கு சிறப்பு கவனம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
எலக்ட்ரானிஸ் துறையில் ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ. 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரி மருத்துவத் திட்டத்தை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்கள் துறை வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மெகா ஜவுளி பூங்காக்கங்கள் அமைக்கப்படும். உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டங்கள் இதில் அடங்கும்.
குறு நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2000 கோடி நிதியில் திட்டம், கன்டெய்னர்களை உற்பத்தி செய்ய ரூ. 10,000 கோடியில் 5 ஆண்டு திட்டம், முக்கிய நகரங்களில் தலா ரூ.5000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், நகராட்சி பண பத்திரம் வெளியிட்டு நிதி திரட்ட ரூ.100 கோடியில் திட்டம், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை 2047க்குள் 12 சதவீதமாக உயர்த்த திட்டம் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து மாநிலங்களுடன் இணைந்து 3 பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள், செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம், அரிய வகை கனிமங்களை உற்பத்தி செய்ய வழித்தடம் திட்டம், விளையாட்டு சாதனங்களை உற்பத்தி செய்ய பிரத்யேக திட்டம், பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க 200 பிரத்யேக பூங்காக்கள் , வங்கித்துறை சீர்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.