இந்தியா

Union Budget 2026: 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்- நிர்மலா சீதாராமன் பெருமிதம்

Published On 2026-02-01 11:40 IST   |   Update On 2026-02-01 11:52:00 IST
  • ஐதராபாத்- சென்னைக்கு, பெங்களூரு- சென்னைக்கு 7 அதிவேக ரெயில் வழித்தடம்.
  • புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.

புதுடெல்லி:

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பின்வருமாறு:-

* காதி, கைத்தறி கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்' என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.

* தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் 7 நகரங்களுக்கு இடையே அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்கப்படும்.

* ஐதராபாத்- சென்னைக்கு, பெங்களூரு- சென்னைக்கு 7 அதிவேக ரெயில் வழித்தடம்.

* தேசிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடம் ஒடிசாவில் ஏற்படுத்தப்படும்.

* கடலோர சரக்கு போக்குவரத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.

* இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்கும் வகையில் புதிய திட்டம்.

* நகர் அடிப்படையிலான வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு.

* புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.

* மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.

* வங்கி துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.

* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மத்திய அரசு மீட்டுள்ளது.

* சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நுண் சிறுகுறு தொழில்துறையை மேம்படுத்த மும்முனை திட்டம் அறிமுகம். புதிய திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

Tags:    

Similar News