செய்திகள்
ஜல்லிக்கட்டு வன்முறைக்கு தி.மு.க.வே காரணம்: நடராஜன் குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு வன்முறைக்கு தி.மு.க.வே காரணம் என புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் பங்கேற்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்ற பீட்டா அமைப்பை இந்தியாவுக்குள் நுழைய அனுமதித்தது காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்த தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசாதான்.
பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தில் ஜனாதிபதி ஒப்புதல் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடத்த தடை பெறப்பட்டது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. போராட்டம் தொடங்கிய 3 நாட்களுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்றார்.
ஆனால் அரசியல் கட்சிகளின் ஆதரவு வேண்டாம் என்று மாணவர்கள் அவரை திருப்பி அனுப்பினர். அதன் பிறகுதான் தி.மு.க. தூண்டுதலின் பேரில் இந்த போராட்டத்தில் ஒருசிலர் ஊடுருவினர்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலினுடன் இருப்பவர்கள் மாணவர்களின் போராட்டத்துக்குள் புகுந்தனர். மாணவர்கள் போராட்டத்தை வைத்து தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் ரெயில் மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.
அறவழியில் நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறைக்கு தி.மு.க.தான் காரணம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை தூண்டிய மு.க.ஸ்டாலின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்கள் மீதும் விஷமிகள் மீதும் தவறு செய்த போலீசார் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமானது. இதை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் பங்கேற்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்ற பீட்டா அமைப்பை இந்தியாவுக்குள் நுழைய அனுமதித்தது காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்த தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசாதான்.
பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தில் ஜனாதிபதி ஒப்புதல் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடத்த தடை பெறப்பட்டது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. போராட்டம் தொடங்கிய 3 நாட்களுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்றார்.
ஆனால் அரசியல் கட்சிகளின் ஆதரவு வேண்டாம் என்று மாணவர்கள் அவரை திருப்பி அனுப்பினர். அதன் பிறகுதான் தி.மு.க. தூண்டுதலின் பேரில் இந்த போராட்டத்தில் ஒருசிலர் ஊடுருவினர்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலினுடன் இருப்பவர்கள் மாணவர்களின் போராட்டத்துக்குள் புகுந்தனர். மாணவர்கள் போராட்டத்தை வைத்து தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் ரெயில் மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.
அறவழியில் நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறைக்கு தி.மு.க.தான் காரணம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை தூண்டிய மு.க.ஸ்டாலின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வன்முறைக்கு காரணமானவர்கள் மீதும் விஷமிகள் மீதும் தவறு செய்த போலீசார் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமானது. இதை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.