செய்திகள்
புதுக்கோட்டை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு: 6 பேர் மீது வழக்கு
புதுக்கோட்டை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள முனியன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட கோவில் காளை மந்தையில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அங்கு கொண்டு வரப்பட்ட பல காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
இது பற்றி தகவல் அறிந்த ராப்பூசல் கிராம நிர்வாக அதிகாரி முரளிசங்கர், இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ராப்பூசலை சேர்ந்த முனியாண்டி, செங்குட்டுவன், துரையன், ரவி, துரைக்கண்ணு, மாரியப்பன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போட்டியை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டி கைவிடப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் விராலிமலை அமலாங்குளம் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு திடலில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சிலர் காளைகளை அலங்கரித்து அழைத்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர்.
திருநல்லூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பாகவும் தடையை மீறி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக காளைகளுக்கு பூஜைகள் செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு அங்குள்ள முனியன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட கோவில் காளை மந்தையில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அங்கு கொண்டு வரப்பட்ட பல காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
இது பற்றி தகவல் அறிந்த ராப்பூசல் கிராம நிர்வாக அதிகாரி முரளிசங்கர், இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ராப்பூசலை சேர்ந்த முனியாண்டி, செங்குட்டுவன், துரையன், ரவி, துரைக்கண்ணு, மாரியப்பன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போட்டியை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டி கைவிடப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் விராலிமலை அமலாங்குளம் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு திடலில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சிலர் காளைகளை அலங்கரித்து அழைத்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர்.
திருநல்லூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பாகவும் தடையை மீறி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. முன்னதாக காளைகளுக்கு பூஜைகள் செய்ய மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.